சென்னையில் நட்சத்திர ஹோட்டலின் ஆக்கிரமிப்பு பகுதி இடிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் ராட்சத செயற்கை நீருற்று இடித்துத் தள்ளப்பட்டது.
சென்னை, ஜெமினி மேம்பாலத்துக்கு கீழ் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தி பார்க் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. நகரில் பிரபலமாக இருக்கும் இந்த நட்சத்திர ஹோட்டலில் கார் பார்க்கிங், செயற்கை நீருற்று, ஜெனரேட்டர் ரூம் ஆகியவை அனைத்தும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை.
இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி பிரேம்நாத் கூறுகையில், மாநகராட்சி விதியின்படி எந்தவொரு கட்டடம் கட்டும்போதும் குறிப்பிட்ட பகுதியை திறந்தவெளி இடமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதன்படி, குறிப்பிட்ட பகுதியை ஒதுக்காமல் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கார் பார்க்கிங், செயற்கை நீருற்று, ஜெனரேட்டர் ரூம் ஆகியவற்றை ஹோட்டல் நிர்வாகத்தினர் கட்டியுள்ளனர். திறந்தவெளி பகுதியாக இருக்க வேண்டிய இடத்தில் கட்டடம் கட்டினால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும் எனக் கூறினார்.
இந்நிலையில் இந்த ஹோட்டலின் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி அளக்கப்பட்டு பின்னர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
பின்பு மண்டல அலுவலர் பிரேம்நாத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் போலீஸாரின் உதவியுடன் நேற்று மாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் நட்சத்திர ஓட்டலின் முகப்பு மற்றும் ராட்சத செயற்கை நீரூற்றை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினார்கள். அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஹோட்டலைச் சுற்றியும் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்றிரவு 8 மணி வரை நீடித்தது. இந்த ஹோட்டலில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
பூங்கா அமைக்க முடிவு-மேயர்:
இது குறித்து சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் கூறுகையில்,
தி பார்க் ஹோட்டல் நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான 21,140 சதுரஅடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 20 கோடி. இங்கு ஆக்கிரமிப்பை அகற்றி முடிந்ததும், அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அழகான பூங்கா கட்டப்படும். இதுபோல மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றார்.
-
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications