சென்னையில் நட்சத்திர ஹோட்டலின் ஆக்கிரமிப்பு பகுதி இடிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் ராட்சத செயற்கை நீருற்று இடித்துத் தள்ளப்பட்டது.
சென்னை, ஜெமினி மேம்பாலத்துக்கு கீழ் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தி பார்க் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. நகரில் பிரபலமாக இருக்கும் இந்த நட்சத்திர ஹோட்டலில் கார் பார்க்கிங், செயற்கை நீருற்று, ஜெனரேட்டர் ரூம் ஆகியவை அனைத்தும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை.
இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி பிரேம்நாத் கூறுகையில், மாநகராட்சி விதியின்படி எந்தவொரு கட்டடம் கட்டும்போதும் குறிப்பிட்ட பகுதியை திறந்தவெளி இடமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதன்படி, குறிப்பிட்ட பகுதியை ஒதுக்காமல் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கார் பார்க்கிங், செயற்கை நீருற்று, ஜெனரேட்டர் ரூம் ஆகியவற்றை ஹோட்டல் நிர்வாகத்தினர் கட்டியுள்ளனர். திறந்தவெளி பகுதியாக இருக்க வேண்டிய இடத்தில் கட்டடம் கட்டினால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும் எனக் கூறினார்.
இந்நிலையில் இந்த ஹோட்டலின் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி அளக்கப்பட்டு பின்னர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
பின்பு மண்டல அலுவலர் பிரேம்நாத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் போலீஸாரின் உதவியுடன் நேற்று மாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் நட்சத்திர ஓட்டலின் முகப்பு மற்றும் ராட்சத செயற்கை நீரூற்றை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினார்கள். அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஹோட்டலைச் சுற்றியும் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்றிரவு 8 மணி வரை நீடித்தது. இந்த ஹோட்டலில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
பூங்கா அமைக்க முடிவு-மேயர்:
இது குறித்து சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் கூறுகையில்,
தி பார்க் ஹோட்டல் நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான 21,140 சதுரஅடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 20 கோடி. இங்கு ஆக்கிரமிப்பை அகற்றி முடிந்ததும், அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அழகான பூங்கா கட்டப்படும். இதுபோல மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications