தமிழ் வழி பள்ளிகளை மூட கேரள அரசு முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளை மாணவர்கள் படிக்க வரவில்லை என்ற காரணத்தைக் காட்டி இந்தக் கல்வியாண்டுடன் மூடி விட அம்மாநில அரசு தீர்மானித்திருப்பதால் தமிழர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு தமிழ் வழிப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான இந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழ் வழியில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
மொத்தம் 200 பள்ளிக்கூடங்களும், 4 கல்லூரிகளும் உள்ளன. இந்த பள்ளி, கல்லூரிகளால் தமிழ் மாணவர்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் வழிக் கல்வி உள்ளது. அதன் பின்னர் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் இல்லை. இதனால் மேல் நிலைக் கல்வியை தமிழில் கற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் சமீப காலமாக தமிழ் வழிக் கல்வியின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் படிக்க தமிழ் மாணவர்களிடையே ஆர்வம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டு வருகிறது.
அதேசமயம், தனியார் பள்ளிகளில் படிக்க வசதியில்லாத பல ஏழை தமிழ் மாணவ, மாணவியர் இந்தப் பள்ளி, கல்லூரிகளில்தான் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இப்பள்ளிகளை மூடி விட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாம். இதனால் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேல் நிலைக் கல்வியையும் தாய் மொழியிலேயே படிக்கலாம்,தேர்வுகளை எழுதலாம் என அரசு உத்தரவிட்டால் மாணவர்கள் மீண்டும் அதிக ஆர்வத்துடன் சேருவார்கள், பள்ளிகளை மூட வேண்டியிருக்காது என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பள்ளிகளை மூடக் கூடாது என கேரள அரசைக் கோர வேண்டும் என்றும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications