திபெத் மலைப் பகுதியில் பயங்கர பூகம்பம்
பீஜிங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்கு சீனாவின், பீஜிங் நகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் ஜெர்ஸ் கவுன்டி என்ற இடத்தில்
இன்று மாலை 4.25 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின. வீடுகள் மற்றும்
அலுவலகங்களில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவுமில்லை.
மேற்கு சீனாவில் உள்ள திபெத்திய பீடபூமிப் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத ஜெர்ஸே என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 6.9 ஆக பதிவாகியுள்ளது.
இன்று மாலை 4.26 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. ஒரு சிலரே வசிக்கின்றனர்.
இந்த பூகம்பத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரம் கிடைக்கவில்லை.