காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மாணவர்கள் மறியல்
கோவை: காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து, யானைகளை கட்டுப்படுத்தக் கோரி 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கோவை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
கோவை அருகேயுள்ள சிறுமுகைப் பகுதியில் உள்ள காடுகளில் யானைகள் ஏராளமாக உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி இரவு நேரங்களில் விளைநிலங்களை நாசப்படுத்துவதுடன், மக்கள் வசிக்கும்
பகுதிகளிலும் புகுந்து வீடுகளை துவம்சம் செய்து விடுகின்றன.
சிறுமுகை பகுதியில் இரவு உணவு தேடி வந்த சில யானைகள் அப்பகுதியில் உள்ள தென்னிந்திய விஸ்கோஸ் பள்ளி காம்பவுண்ட் சுவற்றையும், டெலிபோன் எக்சேஞ்ச் கட்டடத்தையும் தாக்கிவிட்டன. இது தவிர அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளையும் நாசப்படுத்தி விட்டன.
கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அந்த யானைகளை கட்டுப்படுத்தக் கோரியும், யானைகளிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஸ்கோஸ் ஆலைப் பகுதியில் பத்து யானைகளும், 2 குட்டிகளும் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பதால் மக்கள் தொடர்ந்து பீதியுடன் உள்ளனர். வனத்துறை இதுகுறித்து அக்கறை காட்டாமல் இருப்பதால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications