கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ-2,500 கடைகள் நாசம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பழைய மார்க்கெட்டில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தீப்பிடித்ததில் 2,500 கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இங்குள்ள பராபஜாரில் 3000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் தார்ப்பாய்களை கூடாரம் போல் அமைத்து ஏராளமான வீடுகள் உள்ளன.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த வீடு ஒன்றில் பிடித்த தீ மளமளவென்று பரவி அருகில் உள்ள நந்தாராம் மார்க்கெட் பகுதியில் உள்ள 12 மாடி கட்டடத்தில் பரவியது.
நகரின் பல பகுதிகளிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீ அணையும் வேளையில் ஏறக்குறைய அனைத்து வண்டிகளிலும் தண்ணீர் காலியாகிவிட்டதால், மீண்டும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனால் தீயணைப்புப் படை பிரிவினர் இன்னும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,500க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயை அணைக்கும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் யாரும் தீயில் சிக்கி உயிரிழந்து விட்டார்களா என்றும், ஏற்பட்ட சேதம் குறித்த விபரமும் இன்னும் முழுமையாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications