மேட்டுப்பாளையத்தில் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்-பதட்டம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வருவதால் அங்கு பதட்டம் காணப்படுகிறது.
3 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோவிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், 2 நாட்களுக்கு முன் முனீஸ்வரன் கோவிலில் தீவைக்கப்பட்டது. மேலும் பவானி ஆற்றங்கரையில் உள்ள சுப்ரமணியர் கோவில் கதவுகளை உடைத்து ஒரு கும்பல் சிலைகளுக்கு சேதம் விளைவிக்க முயன்றது.
அப்போது கோவிலுக்குள் பொருத்தப்பட்டிருந்த அபாய மணி ஒலித்ததால் கும்பல் ஓடி விட்டது.
அடுத்தடுத்து கோவில்களை குறி வைத்து தாக்குதல் நடந்து வருவதால் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில்கள் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications