பெட்ரோல் ரூ. 2.50, டீசல் ரூ. 1.50 உயர்கிறது

டெல்லி: பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது குறித்து நேற்று மாலை டெல்லியில் நடந்த முக்கிய கூட்டத்தில் சில அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து விலை உயர்வு குறித்து முடிவேதும் எடுக்காமல் கூட்டம் கலைந்தது. நாளையோ அல்லது மறுநாளோ விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த குழு டெல்லியில் கூடியது.
ஆனால், இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் வேறு முக்கிய பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். நாளையோ அல்லது மறுநாளோ முடிவு எடுக்கப்படும் என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பெருமளவில் உயர்ந்துவிட்டதால், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களுக்கு இதுவரை ரூ. 71,808 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் விலையை ரூ. 2ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 40ம் உயர்த்த வேண்டும் என பெட்ரோலிய நிறுவனங்கள் கோரி வருகின்றன.
ஆனால், இந்த அளவுக்கு விலையை உயர்த்தினால் கடும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் 2.50 வரையும், டீசல் விலையை ரூ. 1 முதல் ரூ. 1.50 வரையும் உயர்த்துவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 20 வரை உயர்த்த மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications