விருதுநகர்: கார்-லாரி மோதலில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரை என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்த கார் மீது, டேங்கர் லாரி ஒன்று வேகமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
காரில் பயணித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications