For Quick Alerts
For Daily Alerts
Just In
6 மாதங்களில் நெல்லையில் சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்படும்-உமா சங்கர்
நெல்லை: இன்னும் 6 மாதங்களில் நெல்லையில் சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துவிடும் என எல்காட் தலைவர் உமாசங்கர் கூறியுள்ளார்.
நெல்லையில் கணிப்பொறி நிறுவனங்கள் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து உமாசங்கர் கூறியதாவது,
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மின்சாரம் இங்கேயே உற்பத்தி செய்யபடுகிறது. இப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் திறமை வாய்ந்த மாணவர்கள் கிடைக்கின்றனர்.
இவையெல்லாம் கருத்தில் கொண்டு 50,000 சதுர அடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டடம் கட்டப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து சாப்ட்வேர் நிறுவனகள் செயல்பட ஆரம்பித்துவிடும். இதன் மூலம் 6 மாதங்களில் நெல்லை ஐடி நகரமாக உருவெடுக்கும் என்றார் உமா சங்கர்.
Comments
Story first published: Friday, January 18, 2008, 15:20 [IST]