அரசு அதிகாரிகள் மீது அரசு ஊழியர்கள் திடீர் புகார்!

Subscribe to Oneindia Tamil


மதுரை: அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், சக ஊழியர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக திடீர் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் முத்து சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்ற போதுமான ஊழியர்கள் இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. மேலும் மாநிலத்தில் 1 லட்சத்து 87 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும்.

கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு கூட்டங்கள் மற்றும் பல நடவடிக்கைகளில் அதிகாரிகள், எங்களது ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்களிடம் அத்து மீறி நடந்து வருவது அதிக வேதனை தருகிறது.

இதனை தட்டிக் கேட்கும் ஊழியர் சங்க நிர்வாகிகள் பழி வாங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். அதிகாரிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் .

தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பணி நியமனம் உள்பட பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து பிப்ரவரி 5ம் தேதியன்று தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+