போலி பாஸ்போர்ட்-கருணாவுக்கு 2 ஆண்டு சிறை?

லண்டன்: விடுதலைப் புலிகளின் அதிருப்தி பிரிவு தலைவர் கருணா மீதான போலி பாஸ்போர்ட் வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது புதிய வழக்கை தொடர இங்கிலாந்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று போட்டிக் குழுவை உருவாக்கிய கருணா, இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து வந்தார். கருணாவின் உதவியால்தான் கிழக்கில் உள்ள சில பகுதிகளை ராணுவம், புலிகள் வசமிருந்து மீட்டதாக கூறப்பட்டது.
இந் நிலையில் கடந்த ஆண்டு கருணா, இலங்கையிலிருந்து தப்பி லண்டன் சென்றார். போலி பாஸ்போர்ட் மூலம் அவர் லண்டன் சென்றார். அவரை கடந்த ஆண்டு இறுதியில், இங்கிலாந்து போலீஸார் கைது செய்தனர்.
அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உட்ஸ்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது தனது குற்றத்தை கருணா ஒப்புக் கொண்டார்.
அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என இலங்கை குடியேற்றத் துறை அதிகாரிகள் சார்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து வருகிற 25ம் தேதி கருணாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
அவருக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் அபராதமும் விதிக்கப்படும்.
இதுதவிர இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா இருந்தபோதும், அதன் பின்னர் பிரிந்து வந்த பிறகும், சிறார் வீரர்களை உருவாக்கியது, மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக தனியாக அவர் மீது புதிய வழக்குகளைத் தொடர இங்கிலாந்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே கருணாவை இப்போதைக்கு இலங்கைக்கு இங்கிலாந்து நாடு கடத்தாது என்று தெரிகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications