வட மாநிலங்களில் கடும் குளிர்-பஞ்சாபில் மைனஸ் 3 டிகிரி குளிர்
Subscribe to Oneindia Tamil
சண்டீகர்: வட மாநிலங்களை குளிர் தொடர்ந்து வாட்டி எடுத்து வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் நேற்றிரவு வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரியைத் தொட்டு மக்களை வதைத்தது.
ஒட்டுமொத்த பஞ்சாபிலும் வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாகவே உள்ளது. அம்ரிஸ்தர், லூதியானா, பாடியாலா ஆகிய நகர்களிலும் 1.1 முதல் 2.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கே வெப்பம் நிலவியது. இதனால் மக்கள் குளிரில் நடுநடுங்கி வருகின்றனர்.
அண்டை மாநிலமான ஹரியாணாவிலும் இதே நிலை தான் நிலவுகிறது. அதே போல ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications