மது ஒழிப்பு: குமரி டூ சென்னை பாமக வாகன பிரசாரம்
பூதப்பாண்டி: மது ஒழிப்பை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை டாக்டர் ராமதாஸ் தலைமையில் வாகன பிரச்சாரம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்தார்.
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி அடுத்த மாதம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை டாக்டர் ராமதாஸ் தலைமையில் வாகன பிரசாரம் நடைபெறும்.
தற்போது அரசு 1000 சதுரடியில் வீடு கட்டும் நடுந்தர குடும்பத்தினருக்கு நுகர்பொருள் வாணிக கழகம் முலம் வழங்கப்படும் சிமிண்ட மூடைகளை 400 மூடையாக உயர்த்தி வழங்க வேண்டும்.
முக்கூடல் அணையை தூர்வார வேண்டும். உலக்கை அருவி திட்டத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு கேரளாவுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் லிட்டர் பாலும், 10 ஆயிரம் டன் அரிசியும் வழங்கி வருகிறது.
அதே போல் கேரளாவும் நட்புணர்வோடு முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர முன்வர வேண்டும். இதற்காக கேரளாவுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். நாடு முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றார் மணி.