கடத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி-கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
சென்னை: சென்னையை சேர்ந்த மாணவி கடத்தப்பட்டு 4 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் முடிச்சூரை சேர்ந்தவர் நமீதா(19). இவர் சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னைக்கு வந்த நமீதா, கடந்த 19ம் தேதி வீட்டு முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தவர் திடீரென்று காணவில்லை.
பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் நமீதா கிடைக்கவில்லை. பின்னர் நமீதாவின் பெற்றோர் சேலம், சின்ன அம்மாபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் தான் கடத்தி சென்றதாக போலீசில் புகார் அளித்தனர்.
நமீதா படிக்கும் கேன்டீனில் வேலை பார்த்து வருகிறாராம் செந்தில்குமார். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் நமீதாவை விடுவிக்க ரூ.1 லட்சம் கேட்டு சிலர் அவரின் பெற்றோருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் போலீசார் குழம்பிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications