இனிமேல் தை 1ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு
இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.
இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,
தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.
இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.