உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து வைகோ இன்று உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தமிழகத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து தஞ்சையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
உரத் தட்டுப்பாடு, மின் வெட்டு, மழை நிவாரண உதவிகளை வழங்காமல் தாமதம் செய்வது ஆகியவற்றைக் கண்டித்து தஞ்சையில் இன்று மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார்.
இந்தப் போராட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மதிமுகவினர் பங்கேற்கின்றனர். உண்ணாவிரதத்தை அதிமுக விவசாய அணிச் செயலாளர் துரை. கோவிந்தராஜன் முடித்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications