மும்பை விமான நிலையத்தில் மலேசிய பயணி சாவு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் மலேசியாவில் வந்த இந்தியர் பலியானார்
மலேசியாவில் வசித்து வந்த கிரிதாரிலால் ஜாகிவன் கோலாலம்பூரில் இருந்து தனது மனைவியுடன் மும்பை வந்தார். சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தனது சூட்கேஸ்களுக்காக காத்திருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
இதையடுத்து டாக்டரின் உதவி கோரி அவரது மனைவியும் பயணிகளும் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், அரை மணி நேரம் வரை டாக்டரோ அல்லது ஆம்புலன்ஸோ வரவில்லை. இதையடுத்து அவர் அங்கேயே இறந்தார். இதன் பின்னரே டாக்டர் வந்தார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது.
ஆனால், வந்த டாக்டரும் கூட குடிபோதையில் இருந்துள்ளார்.
இதையடுத்து கிரிதாரிலாலின் உடல் பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவரது மனைவி யார் மீதும் எந்தப் புகாரும் தரவில்லை.
புகார் கொடுத்தாலும் கூட இங்கே என்ன நடந்து விடப் போகிறது..












Click it and Unblock the Notifications