தேசியக் கொடிக்கு அவமானம்: சானியாவை விசாரிக்க கோர்ட் உத்தரவு
திருப்பதி: தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருப்பதி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சானியா மிர்ஸா, ஆஸ்திரேலியாவில் நடந்த ஹோப்மேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டபோது தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் நடந்து கொண்டார். எனவே அவர் மீது தேசிய கெளரவச் சட்டம் 1971ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி குடும்பகா ரமேஷ் என்ற வழக்கறிஞர் திருப்பதி 3வது கூடுதல் மாவட்ட முன்சீப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணா, சானியா மிர்ஸா மீதான புகாரைப் பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சித்தூர் மாவட்ட எஸ்.பி. சசிதர் ரெட்டிக்கு உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கையை மார்ச் 18ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படியும் எஸ்.பிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications