மேற்கு வங்கம்-11 மாவட்டங்களில் பரவிய பறவைக் காய்ச்சல்
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் 11 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி விட்டது.
முதலில் 2 மாவட்டங்களில் முதலில் பறவைக் காய்ச்சல் பரவியது. இங்கு பரவிய பறவைக் காய்ச்சலால் தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் பீதி நிலவியது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கோடிக்கணக்கான முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன. தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என எத்தனை முறை கூறினாலும், மக்கள் பீதியில் தான் உள்ளனர்.
இந் நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் மொத்தமுள்ள 19 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி விட்டது.
கொல்கத்தாவில் இதுநாள் வரை பறவைக் காய்ச்சல் குறித்த பீதி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அங்கும் பரவ ஆரம்பித்துள்ளதால் அம்மாநில அரசு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications