மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் மாயம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் 8 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவர் என்ன ஆனார், என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அருகை உள்ள மார்த்தாண்டம் துறை கோவில்விளாக்கத்தை சேர்ந்தவர் அவுசேப். மீனவர். இவர் கடந்த 16ந் தேதி அதிகாலை ஒரு கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
அவர் இதுவரை திரும்பி வரவில்லை. 9 நாட்கள் ஆகியும் அவர் கரை திரும்பாததால் அவர் என்ன ஆனாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மனைவி தங்கம் கணவரை கண்டுபிடித்து தருமாறு புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications