For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாதகத்தில் குறை-மனைவியை விரட்டியடித்த கணவன்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: ஜாதகத்தில் குறை உள்ளதாகக் கூறி மனைவியை வீட்டை விட்டு விரட்டியடித்த கணவன், குடும்பத்தினர் மீது அந்தப் பெண் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தந்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராஷ்மி (29) இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,

நானும் நெற்குன்றத்தை சேர்ந்த அருள் முருகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளோம்.

திருமணம் நடந்த 16வது நாள் மதுரையில் இருந்த என் தந்தை எத்திராஜ் மரணம் அடைந்தார். அங்கு சென்று விட்டு நான் மீண்டும் சென்னை திரும்பிய போது என் கணவர் குடும்பத்தினர் என்னை ஏற்கவில்லை. எனக்கு மூல நட்சத்திரம் இருப்பதாக கூறி என்னை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.

அதே போல என் கணவரும் என்னை விட்டு ஒதுங்குகிறார். என்னை வீட்டுக்குள் சேர்க்க மறுத்து விட்டனர். வெளியில் துரத்தி விட்டனர்.

நான் என் கணவரிடம் சேர்ந்து வாழ நான் விரும்புகிறேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து என் கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மனுவில் ராஷ்மி கூறியுள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X