தூத்துக்குடியில் புளூபிலிம் தயாரிப்பு?-போலீஸ் ரெய்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு வீட்டில் புளு பிலிம் எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி ஜெய்லானி தெருவில் புதிய திரைப்பட சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் பதுக்கி வைதக்கப்பட்டிருப்பதாகவும் புளு பிலிம்கள் எடுக்கப்படுவதாகவும் எஸ்பி தீபக் தமோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரகுநாதன், மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை ஜெய்லானி தெருவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக காட்சியளித்த தமீம் அன்சாரியின் என்பவரின் வீட்டின் மாடிப் பகுதியின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அந்த வீட்டில் ஆணுறைகள், மது பாட்டில்கள், சேலைகள், நைட்டிகள், மெத்தைகள் சிதறி கிடந்தன. மேலும் டிஜிட்டல் கேமராக்களும் பல பெண்களின் படங்களும் இருந்தன. அலமாரிகளில் ஏராளமான புளு பிலிம் சிடிக்களும் இருந்தன.
இவை தவிர 36 புதிய தமிழ் பட சிடிக்கள், புளூபிலிம் தயாரிக்க பதுக்கப்பட்ட டிவிடிக்கள் ஆகியவையும் சிக்கின. டிஜிட்டல் கேமிரா ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். தமீம் அன்சாரியை தேடி வருகிறார்கள்.