For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிப்படை வசதிகள்-குடியரசு தினத்தில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்!

By Staff
Google Oneindia Tamil News


வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அடிப்படை வசதி செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குடியரசு தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம் நடத்தினர்.

வேதாரண்யம் ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகை குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை என எந்த வசதியும் கிடையாது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பொது மக்கள் புகார் மனு கொடுத்தும் பயனில்லை.

இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் குடியரசு தினத்தில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதே போன்று, வேதாரண்யம் அருகில் அவரிக்காடு என்ற காிராமம் உள்ளது. இந்த கிராமத்திலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை.

இதனால் அந்த பகுதி மக்களும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிப்பு தெரித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொது மக்கள் அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X