For Daily Alerts
Just In
சேது: ஜெயலலிதாவின் மனு மீது இன்று விசாரணை
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும். ராமர் பாலத்திற்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது. இதுதொடர்பான உரிய உத்தரவுகளை மத்திய அரசுக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் அறிவிக்க அவர் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Story first published: Monday, January 28, 2008, 10:34 [IST]