மீனவர் ஸ்டிரைக் வலுக்கிறது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்ந்தது. இதனால் தீவு முழுவதும் மீன் பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்து நிறுத்தக் கோரியும், கடத்திச் செல்லப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கச்சத்தீவு அருகே இலங்கை அரசு கடலில் போட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று 3வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான இயந்திரப் படகுகளும், நாட்டுப் படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். போராட்டம் காரணமாக மீனவர் குடும்பங்களைச் ேசர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.