For Daily Alerts
Just In
ஜார்ஜ் புஷ்ஷுக்கு மிரட்டல்-வாலிபர் கைது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை மிரட்டியதாக அந்நாட்டு வாலிபர் ஒருவரை போலீசார் வெள்ளை மாளிகைக்கு வெளியே கைது செய்தனர்.
நியூஜெர்ஸியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் அலெக்சவ்(28). இவர் நேற்றிரவு வெள்ளை மாளிகையின் வடக்கு வாயில் அருகே நின்று கொண்டு ஜார்ஜ் புஷ்ஷை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். மேலும் அவருக்கு மிரட்டல் விடுத்தும் கத்தினார்.
இதையடுத்து அங்கு நின்றிருந்த உளவுப் பிரிவினர் அவரை அமுக்கி வேனில் போட்டுத் தூக்கிச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவரிடம் ஒரு பையும் இருந்தது. அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.
அதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக அலெக்சாண்டர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, January 29, 2008, 14:56 [IST]