நேபாளத்தின் ஒல்லிப் பெண் - பணம் கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்

Subscribe to Oneindia Tamil


காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஈஸ்வரி மாயா சினால், அநாட்டிலேயே மிகவும் ஒல்லியான மற்றும் குள்ளமான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவரைப் பார்க்க தினசரி பெரும் கூட்டம் கூடுகிறதாம்.

நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் உள்ள சைலை கிராமத்தில் கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் ஈஸ்வரி மாயா. இவருக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது உயரம் 28 இன்ச்சுகள்தான். எடையோ வெறும் 6 கிலோதான்.

நேபாளத்திலேயே இவர் தான் மிகவும் குள்ளமான மற்றும் ஒல்லியான பெண்.

இவர் குறித்த தகவல் நேபாளத்தில் வெகு வேகமாக பரவவே பிரபலமாகி விட்டார் ஈஸ்வரி. தற்போது மேற்கு நேபாளத்தில் உள்ள நேபாள்கஞ்ச் என்ற இடத்தில் தேசிய வர்த்த திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஈஸ்வரி ஒரு காட்சிப் பொருள் போல வைக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடுகிறது. அவரைப் பார்க்க தலைக்கு ரூ. 20 பணமும் வசூலிக்கிறார்கள்.

ஈஸ்வரி குறித்து அவரது தந்தை தன் பகதூர் சினால் கூறுகையில், ஈஸ்வரி பிறந்தபோது 200 கிராம் எடையுடன்தான் இருந்தாள். உலகிலேயே எனது மகள்தான் மிகவும் குள்ளமான மற்றும் எடை குறைவான பெண்.

நாட்டுப் புற பாட்டுக்கு நன்றாக நடனம் ஆடுவாள். அவளைப் பார்க்க வருகிறவர்கள் அன்பளிப்புகளையும் கொடுத்துச் செல்கின்றனர் என்றார் பகதூர்.

இதுவரை ஆயிரக்கணக்கான பேர் ஈஸ்வரியை பார்த்துச் சென்றுள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+