நாலந்தா பல்கலை. போர்ட் மீட்டிங்கில் கலாம்
பாட்னா: சர்வதேச நாலந்தா பல்கலைக்கழகத்தின் முதல் போர்டு மீட்டிங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்கவுள்ளார்.
பீகார் மாநில அரசு நாலந்தா சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முதலாவது போர்டு கூட்டம் பிப்ரவரி 8ம் தேதி பாட்னாவில் நடைபெறுகிறது. இதில் கலாம் பங்கேற்கவுள்ளதாக மாநில மனித வள மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அஞ்சனி குமார் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பீகாரில் 2 நாள் பயணமாக கலாம் வருகை தரவுள்ளார்.
இந்த பயணத்தின்போது நாலந்தா பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை அவர் பார்வையிடுகிறார். பின்னர் 9 பேர் கொண்ட போர்டு மீட்டிங்கிலும் அவர் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் குறித்த திட்ட விவாதத்திலும் அவர் பங்கேற்கிறார்.
போர்டு தலைவராக குடியரசுத் தலைவரின் முன்னாள் ஆலோசகர் ஒய்.எஸ்.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நாலந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது முதலே அதுதொடர்பான ஆய்வுகள், ஆலோசனைகளில் டாக்டர் ராஜன் பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான மசோதாவை உருவாக்கவும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
பல்கலைக்கழக போர்டை உருவாக்க மாநில அரசு ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும் நிலம் வாங்குதவற்காக ரூ. 8.77 கோடி நிதியையும் மாநில அரசு ஒதுக்கியது என்றார் அவர்.
நாலந்தா பல்கலைக்கழகம் தொடர்பாக ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இரு ஆய்வுக் கூட்டங்கள் நடந்துள்ளன. 3வது கூட்டம் சீனாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications