பிப். 2 முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பிரிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பிரபல கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பிரிவு பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி இந்தப் பிரிவை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவும் கலந்து கொள்கிறார்.
இந்த புதிய பிரிவின் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் கார் தயாரிப்பு என்ற இலக்கிலிருந்து 6 லட்சம் என்ற இலக்கை ஹூண்டாய் எட்டும்.
புதிய ஹூண்டாய் தயாரிப்பு நிறுவனம் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம், கெட்ஸ் பிரைம், சோனாட்டா எம்பெரா சிஆர்டிஐ, சான்ட்ரோ சிஎன்ஜி ஆகிய புதிய வகை கார்களை வெளியிட்டது. இதுதவிர ஐ10 மெர்ஜ் என்ற புதிய மாடல் காரையும் அது வெளியிட்டது.












Click it and Unblock the Notifications