விடுதலைப் புலிகள்-கருணாநிதிக்கு காங்கிரஸ் நன்றி

சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 28ம் தேதியன்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அத்துடன் சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதை வலியுறுத்தினார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தோழர்களின் இந்த வேதனையான உணர்வை ஏற்று விடுதலைப் புலிகளை ஆதரித்து எந்த செயல்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பினை சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த அறிவிப்பின்படி விடுதலைப் புலிகளை ஆதரித்தோர் மீது உரிய நடவடிக்கையை தமிழகக் காவல்துறை நிச்சயம் எடுக்கும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சட்டசபையில் வெளிநடப்பு செய்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்த பின் காங்கிரஸ் தரப்பில் இருந்து முதல்வருக்கு ஆதரவாக வெளியாகும் முதல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications