சுஷில்ஹரி பள்ளியின் ஆண்டு விழா
சென்னை: சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் 7வது ஆண்டு விழா ஜனவரி 28ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவியரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா நடைபெற்றது.
வீணாகும் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்து மாணவ, மாணவியர் நடத்திய அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.
மெர்ச்சன்ட் ஆப் வெனிஸ் நாடகத்தையும் மாணவர்கள் நடத்திக் காட்டினர். நாட்டுப்புறப் பாடல்கள், கலாச்சார நடனம் ஆகியவையும் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இடம் பெற்றது.
பள்ளி நிறுவனர் ஸ்ரீ சிவசங்கர் பாபாவின் 59வது பிறந்த நாள் விழாவும், ஆண்டு விழாவின்போது வந்ததையொட்டி, 59 பலூன்கள் பறக்க விடப்பட்டன. மேலும் 59 மரக் கன்றுகளும் நடப்பட்ன.
150க்கும் மேற்பட்ட போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீசிவசங்கர் பாபா பரிசுகளை வழங்கினார்.
பள்ளி தாளாளர் எஸ்.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications