அருணாச்சல் பிரதேச வளர்ச்சிக்கு ரூ. 8000 கோடி நிதி: பிரதமர்
இடாநகர்: அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், தலைநகர் இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், வட கிழக்கு மாநிலங்களின் நலனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழு உறுதியுடன் உள்ளது.
அருணாச்சல் பிரதேசதத்தின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ. 8000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
நாட்டின் மிகச் சிறந்த பிராந்தியமாக வட கிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications