For Quick Alerts
For Daily Alerts
Just In
போதை மருந்து-சென்னை விமான நிலையத்தில் பயணி கைது
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் போதை மருந்து கடத்திய வாலிபரை சுங்க இலாகாவினர் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் மலாகி தமீம் அன்சாரி (22). இவர் நேற்றிரவு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கோலாலம்பூர் செல்ல சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அன்சாரியின் பெட்டியை சோதனை செய்த சுங்க இலாகாவினர் பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளை கைப்பற்றினர். அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.30 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
இதையடுத்து போதை மருந்து கடத்த முயன்ற அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Friday, February 1, 2008, 14:19 [IST]