கொலை வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு ஆயுள்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: வாலிபரை கொலை செய்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 3 பேருக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் ரோட்டை சேர்ந்தவர் ஐயப்பன். கட்டட வேலை பார்த்து வந்த இவரை கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் குமரேசன், அவரது மகன் ரமேஷ், இசக்கி ஆகிய 3 பேரும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் ஐயப்பனை கொலை செய்த குமரேசன், ரமேஷ், இசக்கி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி காமத் தீர்ப்பு வழங்கினார்.












Click it and Unblock the Notifications