For Daily Alerts
Just In
தமிழ் புத்தாண்டு மசோதா நிறைவேறியது
சென்னை:தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேறியது.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதன் மீது இன்று விவாதம் நடைபெற்றது.
இ.எஸ்.எஸ்.ராமன் (காங்.), நன்மாறன் (சிபிஎம்), ஆறுமுகம் (பாமக), சிவபுண்ணியம் (சிபிஐ), மு.கண்ணப்பன் (மதிமுக), செல்வம் (விடுதலைச்சிறுத்தைகள்) ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அனைவரும் மசோதாவை வரவேற்று முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திருப்பூர், ஈரோடு மாநகராட்சி மசோதாக்களும், மற்ற அமைச்சர்கள் கொண்டு வந்த மசோதாக்களும் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
Comments
Story first published: Friday, February 1, 2008, 19:49 [IST]