For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.3,000த்தை தொலை வாலிபர் தற்கொலை!

By Staff
Google Oneindia Tamil News


நாசரேத்: நாசரேத் அருகே இறைச்சிக்கடை வைத்திருந்தவர் பணம் காணாமல் போனதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தை அருகில் உள்ள பிள்ளையன்மனையை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணம் ஆகி மல்லிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

ஆடு வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.3,000த்தை தங்கராஜ் தொலைத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உடனே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதுபற்றி நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் வாலிபர் பலி:

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரை சேர்ந்தவர் திருப்பதி நம்பி. இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆழ்வார்திருநகரி அருகே பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X