அணு ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்த காவ்ரி (ஹதீப்-5) நடுத்தர ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
இந்த ஏவுகணை 1300 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடிய தன்மை படைத்ததாகும். கடந்த வெள்ளிக்கிழமைதான் 700 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடிய ஷாஹீன் 1 ஏவுகணையை பாகிஸ்தான் ஏவி
பரிசோதித்தது.
இன்றைய ஏவுகணை சோதனையை அதிபர் பர்வேஸ் முஷாரப், ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் கயானி, மூத்த ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் நேரில் பார்த்தனர்.
பின்னர் விஞ்ஞானிகளையும், ராணுவ அதிகாரிகளையும் முஷாரப் பாராட்டினார். பிறகு அவர் பேசுகையில், பாகிஸ்தான் சிறப்பான, வலுவான அணு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை திறம்பட சமாளிக்கும், முறியடிக்கும் திறன் தற்போது பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ளது என்றார்.
1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடுத்தர ரக ஏவுகணைத் திட்டத்தை பரிசோதித்து வருகிறது பாகிஸ்தான். முதலில் காவ்ரி 1 ஏவி சோதிக்கப்பட்டது. அதையடுத்து ஷாஹீன், காஸ்னவி, அப்தாலி ஆகிய ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டன.
இந்த வரிசையில் ஹதீப் 6 (ஷாஹீன் 2) ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடிய நீண்ட தூர ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications