கொலை வழக்கில் 2 இந்தியர்களுக்கு துபாயில் ஆயுள் தண்டனை
துபாய்: சக இந்தியத் தொழிலாளரை, ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி அவர் சம்மதிக்காததால், கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
எம்.பி. (37), ஏ.கே. (40) ஆகிய இருவரும் துபாயில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள். இருவரும் எஸ்.எல் என்கிற இன்னொரு இந்தியத் தொழிலாளரை ஓரினச் சேர்க்கைக்கை வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளனர். அவர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், திடீரென எஸ்.எல். காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது நிறுவனம் போலீஸில் புகார் கொடுத்தது. போலீஸார் விசாரணை நடத்தியதில், எஸ்.எல்.லின் பிணம் கிடைத்தது.
விசாரணையில், எம்.பி. மற்றும் ஏ.கே. ஆகியோர் சிக்கினர். எஸ்.எல்லின் கையைக் கட்டி கழுத்தை நெரித்துக் கொடூரமாக அவர்கள் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் துபாய் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
அந்நாட்டு ஆயுள் தண்டனை என்பது 25 ஆண்டு காலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications