ஒட்டு கேட்பு-கருணாநிதியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்கும் சுவாமி

சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
என்னுடைய செல்போன், தொலைபேசி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் சட்ட விரோதமாக ஒட்டு கேட்கப்படுகின்றன. இது குறித்து தமிழக தலைமை செயலருக்கு நான் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
அரசியல் சட்ட விதி 19ன் கீழ் எனக்குள்ள அடிப்படை உரிமையை மீறியதற்காக முதலமைச்சர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்.
ஏற்கனவே கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, தொலைபேசி ஒட்டு கேட்கும் விவகாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஏற்பட்ட கதிதான் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஏற்படும்.
1997 ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப்சிங் தீர்ப்பு ஒன்றை கொடுத்துள்ளார். ஒரு தொலைபேசி ஒட்டு கேட்பதற்கான வரைமுறையையும் கொடுத்துள்ளார். அந்த வரைமுறையை முதலமைச்சர் கருணாநிதி பின்பற்றவில்லை.
சேது சமுத்திர திட்டம் தற்போது ICUக்கு ('தீவிர சிகிச்சை பிரிவு) போய்விட்டது. முதலமைச்சர் கருணாநிதிதான் அதற்கு ஆக்சிஜன் கொடுத்து தக்க வைத்துள்ளார். அந்த திட்டம் கைவிடப்படுவது உறுதி.
டி.ஆர்.பாலு எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் நேர்மையற்றவர் என்று நீதிமன்றம் மூலம் நிரூபிக்க முடிவு செய்துள்ளேன். அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரிமையை மீறி விட்டதாக அவர் மீது உரிமை மீறல் அரசு கொண்டு வந்துள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டசபையில் படித்ததற்காக உரிமை மீறல் கொண்டு வர முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. உரிமை மீறல் கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications