தற்கொலைப் படை மிரட்டல் - அத்வானி ரத யாத்திரை ரத்து?
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் பாஜக நம்புகிறது. இதையடுத்து சமீபத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்டார்
இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்காக பாஜகவினரை முடுக்கி விடும் பொருட்டு நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்த அத்வானி தீர்மானித்தார். ஜபல்பூரிலிருந்து நாளை இந்த ரத யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் இந்த ரத யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அத்வானியின் கூட்டங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று எச்சரிக்கை விடுத்தது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அத்வானியின் ரத யாத்திரையை ஒத்திவைக்க பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான முடிவு நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.