ராஜ் தாக்கரே வீட்டுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். எம்.பி. கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: வட இந்தியர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் வீடு நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜ் தாக்கரேவின் தேச விரோத கருத்துக்கள், வட இந்தியர்களுக்கு எதிரான துவேஷம், மும்பையில் கடந்த 2 நாட்களாக நடந்து வரும் வனமுறை ஆகியவற்றைக் கண்டித்து அவரது வீடு நோக்கி ஊர்வலமாக செல்லப் போதாக சஞ்சய் நிருபம் அறிவித்திருந்தார்.
இதையடுத்து தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நிருபமும் அவரது ஆதரவாளர்களும் ஊர்வலமாக கிளம்பினர்.
தாதரில் உள்ள கணேஷ் செளக் என்ற இடத்திலிருந்து அவர்கள் ஊர்வலம் செல்ல எத்தனித்தபோது போலீஸார் தலையிட்டு தடுத்து அவர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications