கோவில் விழாவில் குத்தாட்டம் போட்ட 10 பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஆபாசமாக ஆடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ளது பூவாத்தகுடி. இங்கு புகழ்பெற்ற காளியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்கும்.
இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்ற கலைஞர்கள் முதலில் சினிமா பாடல்களுக்கு ஆடினர். பின்னர் ஆபாச ஆட்டங்களுக்கு மாறினர்.
இது தொடர்பாக புதுக்கோட்டை எஸ்.பி.க்கு போன் மூலம் தகவல் வந்தது. இப்புகாரை அடுத்து அறந்தாங்கி சப் - இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் கோவில் திருவிழாவிற்கு நேரிடையாக சென்று அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது மீண்டும் ஆபாச நடனம் நடைபெற்றது.
அப்போது ஆபாச நடனம் ஆடிய சரவணன், உஷா, ராதா, லதா, மணி, சிதம்பரம், பாலு, ராஜ்குமார், சந்திரன் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர்.