3 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம் - இலங்கை படைகள் கடத்தல்?
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களைக் காணவில்லை. அவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டனரா என்ற அச்சம் மீனவர்களிடையே எழுந்துள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகன், முத்து, முனியசாமி ஆகிய 3 மீனவர்கள் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று மூவரும் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் திரும்பவில்லை. இதையடுத்து அவர்களைத் தேடி சில மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். தீவிர தேடுதல் வேட்டையில் அந்த மூன்று பேரும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசுக்கும், மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் 12 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இந்த நிலையில் புதிதாக 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளது ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications