விடுதலைப் புலிகள் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது: நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறுவது சரியல்ல, அது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சிவகங்கை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நடந்த ஓரிரு சம்பவங்களை வைத்து விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக கூறுவது சரியல்ல. அது மிகைப்படுத்தபப்ட்ட கற்பனை.
இந்தப் பிரச்சினையை அரசியல் கட்சிகள் பெரிதாக்கி அரசியல் செய்யக் கூடாது. இதை வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயலக் கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications