தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகை மாவட்டத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
நாகை மாவட்டம் பட்டினச்சேரியை சேர்ந்தவர் கலியபெருமாள் (58). இவர் கடலில் சென்று மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
நேற்று மாலை நாகூர் வெட்டாற்றங்கரையில் உட்கார்ந்து மீன் பிடிக்கும் வலை பின்னிக் கொண்டு இருந்தார்.
அப்போது கலியபெருமாளுக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது படகின் ஓட்டையை அடைக்க பயன்படுத்தபடும் கேலிட் என்ற ஆசிட்டை எடுத்து தவறுதலாக குடித்து விட்டார். இதனால் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் கலியபெருமாளை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications