துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி - மே. வங்கத்தில் பந்த்
கொல்கத்தா: பார்வர்ட் பிளாக் கட்சியினர் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் அக்கட்சி சார்பில் பந்த் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கம், கூச் பிகார் மாவட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியின் விவசாயப் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரேஷன் வசதி மற்றும் வேலை கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவர்களை கலைப்பதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் இன்று 24 மணிநேர முழு அடைப்பு நடத்தப் போவதாக பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்தது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் துவங்கியது.
இதனால் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.
ஹவுரா - சியால்டா இடையே ரயில் தண்டவாளத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் தடுப்புகளை போட்டிருந்ததால், இன்று முக்கிய ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆனால் விமான போக்குவரத்து மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டது.
ஒரு சில இடங்களில் அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் ஓடுகின்றது.
துப்பாக்கிச்சூடு நடந்த கூச் பிகார் மாவட்டத்தில் பந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications