தென்காசி குண்டு வெடிப்பு: 2 மாணவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது
தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மாணவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதியன்று குண்டுகள் வெடித்தது.
இது தொடர்பாக டிஐஜி கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து குமார் பாண்டியனின் அண்ணன் ரவிபாண்டியன், குமார் என்ற கேடிசி குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் (4ம் தேதி) கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக டிஐஜி கண்ணப்பன் தெரிவித்தார்.
இந் நிலையில் போலீசார் தென்காசி கூலக்கடை பஜாரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் வேல்முருகன், செங்கோட்டை விஸ்வகர்ம தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலமுருகன், சங்கரன் மகன் மாசாணம் என்ற மகேஷ் மற்றும் தென்காசி அரசு மகன் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 2 வெடிகுண்டுகளும், 6 டெட்டனேட்டர்களும், கைப்பற்றப்பட்டன. கைதானவர்களில் பாலமுருகன் ஐடிஐயிலும், வேல்முருகன் தனியார் பயிற்சி பள்ளியிலும் பயின்று வருகின்றனர். மகேஷ் பிளம்பராகவும், முருகன் கட்டிட தொழிலாளியாகவும் உள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications