போப்பை சந்திக்க விருப்பம்: பின் லேடன் மகன் உமர்
ரோம்: அல் கொய்தா தலைவர் ஓசாமா பின் லேடனின் மகன் உமர் பின் லேடன், போப்பாண்டவரை சந்திக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
லேடனின் மகன் உமர். 26 வயதாகும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னை விட 30 வயது மூத்த இங்கிலாந்துப் பெண்மணியை மணந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் வன்முறையைக் கைவிட்டு அமைதிக்குத் திரும்புமாறு தனது தந்தைக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் சமாதான தூதராக பணியாற்ற விரும்புவதாகவும் அறிவித்தார்.
தற்போது இத்தாலி வந்துள்ள உமர், போப்பாண்டவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இத்தாலி தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
போப் ஆண்டவரை சந்திக்க நான் விரும்புகிறேன். இதற்காக நான் வாடிகன் செல்லப் போகிறேன். அவரை சந்திப்பது கடினம் என எனக்கு தெரியும். ஆனாலும் நான் தொடர்ந்து
முயற்சித்து அவரை சந்திப்பேன்.
மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுபட நான் பாடுபடுவேன். இதற்கு நான் சமாதான தூதராக இருக்கவே விரும்புகிறேன்.
என் தந்தை ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அவர் மரணம் அடைந்திருந்தால் அந்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரை நான் பார்த்து பல ஆண்டுகள் ஆகிறது என்றார் உமர் பின்லேடன்.












Click it and Unblock the Notifications