சுவிட்சிங் யூனிட்டில் கோளாறு: பிஎஸ்என்எல் செல்போன் சேவைகள் பாதிப்பு
கோவை: கோவையில் பிஎஸ்என்எல் மொபைல் சுவிட்சிங் யூனிட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் திடீரென பி.எஸ்.என்.எல். தொலைபேசியிலிருந்து மற்ற தொலைபேசிகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தனியார் செல்போன்கள் மூலமாக பி.எஸ்.என்.எல். செல்போன்களை தொடர்பு கொள்ள முடிந்தது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். வட்டாரத்தில் விசாரித்தபோது,
கோவையில் உள்ள தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தின் பராமரிப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். மொபைல் சுவிட்சிங் யூனிட்டில் நேற்று மாலை கோளாறு ஏற்பட்டது. இதனால் தான் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவைகள், தொலைபேசி சேவைகள் தடைபட்டன.
சென்னைக்குள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை. சென்னைக்கு வெளியே மற்ற இடங்களுக்கு பேசுவதில் தான் சிக்கல் என்றனர் பிஎஸ்என்எல் தரப்பில்.
இன்று மாலைக்குள் கோளாறு சரி செய்யப்பட்டு விடுமாம்.
இந்த கோளாரால் அதிகம் பாதிக்கப்பட்டது கோவை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தான்.












Click it and Unblock the Notifications