காஷ்மீரில் பனி மலை சரிவு-2 பேர் பலி, 45 பேர் மீட்பு

Subscribe to Oneindia Tamil

Avalanche
ஸ்ரீநகர்: காஷ்மீரின் குஜ்ஜார்படி பகுதியில் பனி மலை சரிந்ததில் (avalanche) பனியில் புதைந்தவர்களில் 45 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். 2 பேர் பலியாகிவிட்டனர்.

அதே போல ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட இரு வேறு பனி மலை சரிவில் 3 பேர் பலியாகினர்.

தெற்கு காஷ்மீரில் மலைப் பகுதிகளில் பனி கொட்டி வருகிறது. இன்று காலை பனிச் சரிவு ஏற்பட்டதில் ஸ்ரீநகர்-ஜம்மூ நெடுஞ்சாலையில் உள்ள குஜ்ஜார்படியை ஒட்டியுள்ள குலாப் பாக் என்ற கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள 10 வீடுகள் பனியில் புதைந்தன.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் பனியில் புதைந்தனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன் ராணுவம் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 2 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டனர்.

கடும் பனிப் பொழிவால் இந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றடையவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் ஏற்பட்ட இந்த பனிச் சரிவில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டதாக முதலில் தகவல்கள் வந்தன.

ஹிமாச்சலில்...

அதே போல சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவால் கடந்த இரு நாட்களில் இரு வேறு இடங்களில் பனி மலை சரிந்து மூவர் பலியாயியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+